வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு ரூ.100 தரிசனம் இல்லை
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் மே 31 வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று முருகனை வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30-க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்தப்படும். காலை 10 மணிக்கு மூலவர் மற்றும் சண்முகர் இருவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிப்பார். இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறும். இத்திருவிழாவிற்காக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தருவர்.
பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பக்தர்களின் வசதிக்கு அரசுப் பேருந்துகளும், தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்கள் நலன் கருதி ₹100 கட்டணத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை 4 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம் அமலில் இருக்கும். இதன் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மே 28 முதல் மே 31 வரை, கட்டணமில்லா பொது தரிசன முறையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications