சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் மர்மம் - முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன் என்கிறார் கனிமொழி

சாத்தான்குளத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு நிதி உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    சாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன? ஜெயராஜ் மனைவி கதறல்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரை கடந்த 19 தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர், அப்போது காவல்துறையினருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

    காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பாதிப்பு ஏற்பட்டது. கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு ட்விட்டரில் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தாக்கிய போலீஸ்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது.

    உரிய நடவடிக்கை தேவை

    காவல்துறை நிகழ்த்தியிருக்கும் வன்முறை என்பது தெளிவாகத் தெரிகிறது. உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பணியிட மாற்றம் போதுமா

    சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவத்தில் எஸ்.ஐ. இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது தண்டனை அல்ல.

    கடுமையான நடவடிக்கை

    இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    உரிய இழப்பீடு

    சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    தொடரும் போராட்டம்

    தொடரும் போராட்டம்

    தந்தை மகன் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் தாக்கியதால் உயிரிழந்த ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+