விடிய விடிய கன மழை.. தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை.. விமானங்கள் ரத்து
தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன.

இந்த நிலையில் மழை காரணமாக இன்று ஒரு நாள் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியிலும்
இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, திங்கள்நகர், குலசேகரம் போன்ற பகுதிகளிலும் விடியவிடிய மழை பெய்ததால் அப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
[வெடித்து அழுத குட்டி பாப்பா.. சிரிக்க வைத்த செல்ல அண்ணன்.. கன்னத்தில் முத்தம்.. அன்பு விளையாட்டு!]
கேதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications