ரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி
ரஜினிக்கும் சம்மன் அனுப்ப வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்
தூத்துக்குடி: சீமான் அசரவே இல்லை.. சுற்றிலும் கடுமையான சர்ச்சைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில்.. அதிமுகவை வம்பிழுத்து.. ரஜினியையும் விவகாரமாக கோர்த்து விட்டு அதிரடி காட்டியுள்ளார்.
சில தினங்களாக சீமானின் பேச்சுதான் தமிழகத்தின் சுடச்சுட விவகாரமாகி வருகிறது. ஏகப்பட்ட விமர்சனங்கள்.. கண்டனங்கள்.. வரவேற்புகள்.. நடுநிலைமைகள்.. என மாறி மாறி தாக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் பேசியதால், அவர்மீது வழக்கு போட்டாகி விட்டது. ஆனாலும் தன் கருத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். சட்டப்பூர்வமாகவும் இதை அணுக போவதாக தெரிவித்துவிட்டார்.

ஆஜர்
வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் அவருக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்னொரு பக்கம் கிளம்பி உள்ளனர். இந்த சமயத்தில் தூத்துக்குடி சமாச்சாரம் குறித்து சீமான் பேசி உள்ளார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

பயங்கரவாதிகள்
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று ரஜினி சொன்னாரே.. இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறையா வெச்சிருக்கிறார்? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவே இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதானே நடவடிக்கை எடுத்திருக்கணும். அதைவிட்டுவிட்டு, அப்பாவி மக்களை ஏன் சுட்டாங்க? பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக அன்னைக்கு ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டும். இதை பற்றி நான் நீதிபதியிடம் வலியுறுத்த போகிறேன்" என்றார் சீமான்.

விசாரணை வளையம்
வழக்கமாகவே ரஜினி என்றாலே சூடாகும் சீமான், இந்த விஷயத்தை இவ்வளவு நாள் கழித்து கிண்டி உள்ளார். ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.

நீதிபதி
இப்போது, சீமானின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படுமானால், ரஜினிக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. அப்படி அனுப்பப்பட்டால் அவரும் இந்த விசாரணை சம்பந்தமாக பதில் அளிக்க வரவேண்டி இருக்கும் என்பதாலும், சீமான் இதை அழுத்தமாக வலியுறுத்துவார் என்பதாலும் மேட்டர் மேலும் சூடாகும் என்றே தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications