ஸ்ரீவைகுண்டம் மாணவர் வெட்டப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க திருமாவளவன் வேண்டுகோள்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர் மீது 3 பேர் கொண்ட கும்பல் ஜாதி ரீதியாக கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரை விசிக தலைவர் நேரில் சந்தித்தார். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இதுபோன்ற வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே அவற்றை கண்காணித்து தடுக்கும் வகையிலும் சிறப்பு புலானாய்வுப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தங்ககணேஷ் மகன் தேவேந்திரன். 17 வயதான இந்த மாணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தேவேந்திரன் சில நாட்களுக்கு முன்பு ஆங்கில தேர்வு எழுதுவதற்காக அரியநாயகிபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் கும்பல் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர். தேவேந்திரராஜை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தரையில் போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த தேவேந்திரராஜை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி ரீதியாக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இதுபோன்ற வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே அவற்றை கண்காணித்து தடுக்கும் வகையிலும் சிறப்பு புலானாய்வுப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும். எப்படி தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென க்யூ பிரிவு உள்ளதோ, அதேபோல சாதி மத அடிப்படையில் நடைபெறுகிற வன்கொடுமைகளை, வன்முறைகளை தடுக்க புலனாய்வுப் பிரிவை அமைக்க வேண்டும்.
மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை சார்பில் பரப்பப்பட்ட தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது. காதல் விவகாரத்தின் பின்னணியில்தான் மாணவர் தாக்கப்பட்டார் என்று காவல் துறையைச் சார்ந்தவர்களே ஆதாரமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே வதந்தியை பரப்பியுள்ளனர். காவல் துறையினரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. யாரை காப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.
கபடிப் போட்டியில் இந்த மாணவர் விளையாடிய குழுவினர் வெற்றி பெற்றதன் பின்னணியில் தான் இந்தப் பகை உருவாகியிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அந்த மாணவர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறான் என்கிற உண்மையை ஏன் திசை திருப்ப வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இப்படிப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இந்த புலனாய்வு செய்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். அவர்கள் இந்த சம்பவத்தில் புலனாய்வு செய்தால் இதுபோல வதந்தியைப் பரப்பியவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடைபெறுகிறது என்பதை பலமுறை நாம் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். அதிகார வர்க்கத்தினர் ஏன் தலித் விரோத மனநிலையில் இயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இதில் நேரடியாக முதல்வர் தலையிட வேண்டும். அவருடைய கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து விசிக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாங்குநேரி சம்பவத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆங்காங்கே நீதி கேட்டு கட்சியினர் களத்தில் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications