வைரலாகும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு ஆபாச வீடியோ.. பின்னணி என்ன?
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை நடத்திய சமூக செயல்பாட்டாளரான ஓய்வு பெற்ற பேராசிரியை பாத்திமா பாபு தொடர்பான ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தூத்துக்குடியிலுள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாத்திமா பாபு. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தவர்.
வீராங்கனை என்ற அமைப்பை தொடங்கி போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளரும் கூட.

அவதூறுகள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைக்க துவங்கியது முதலே, பாத்திமா பாபு மீது பல்வேறு அவதூறுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன. ஆலைக்கு எதிராக இயங்கி வரும் வேறு நிறுவனங்களிடம், பாத்திமா பாபு பணம் பெற்றுதான் போராட்டம் நடத்துகிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன.

வீடியோ
இதுபோன்ற சூழ்நிலையில், திடீரென இப்போது, பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் போராட்டத்தில் தன்னோடு பங்கேற்ற தெர்மல்ராஜா என்பவருடன் ஹோட்டல் அறையில், நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் தூத்துக்குடி நகரில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகின்றன.

வீடியோ மிரட்டல்
தெர்மல்ராஜா என்பவர், பாத்திமா பாபுவை முத்தமிடுவது போன்றும், பெட்டில் நெருக்கமாக இருப்பது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் பலரின் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம்
ஆனால், இது சதிவேலை என்கிறார், பாத்திமா பாபு. திட்டமிட்ட சதி இதன் பின்னணியில் இருப்பதாகவும், எனவே, காவல்துறையில் புகார் அளிக்கப்போகிறேன் என்றும் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்துவிட ஆலை நிர்வாகம் கடும் முயற்சிகள் எடுக்கும் சூழலில், இதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கவுன்சிலர் கோல்டன் தலைமையில் சிலர் பாத்திமா பாபு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கலைந்துபோகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications