Sterlite verdict: தூத்துக்குடியில் அதிகாலை 4 மணி முதல் போலீஸ் குவிப்பு.. தென் மண்டல ஐஜி வருகை
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு இன்று மதியம் 12 மணி அளவில் வர உள்ளதால் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் காலை 4 மணியில் இருந்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டத்திலிருந்தும் காவல்துறையினர் வந்து குவிந்துள்ளனர்
முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், மதுரை டிஐஜி பிரதீப்குமார், நெல்லை சரக டி ஐஜி கபில்குமார் சரோத்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி நகருக்குள் வரும் வாகனங்கள் தீவிர தணிக்கைச் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு, மே 22ம் தேதி தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.