புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு- நீட்-க்கு இப்ப நோ- அப்ப நாங்க யாருடன் கூட்டணி? புரியாத புதிர் 'சுதீஷ்'
தூத்துக்குடி : 2021- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சுதீஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை தேமுதிக ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும்.
அதனால் நாங்கள் ஆதரித்தோம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தேமுதிக எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது நல்லதுதான்.

கொள்கை
தேமுதிகவின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம். அன்னை மொழி கற்போம் என்பதுதான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.

கட்சி தலைமை அறிவிக்கும்
2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை பொருத்தவரை நடிகர் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பிறகு பார்க்கலாம். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்திற்குள் செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொருத்து ஜனவரி மாதம் இறுதிக்குள் கட்சி தலைமையே அறிவிக்கும் என சுதீஷ் கூறினார்.

தேமுதிக அதிமுக கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தல், தமிழக இடைத்தேர்தல்களில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. இந்த நிலையில் அண்மையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்பினால், அதன்படி செயல்படுவோம் என்றார்.

ஜனவரியில் தெரியும்
எனவே வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றே தெரிகிறது. இல்லாவிட்டால் 3ஆவது அணி அமைய வாய்ப்பிருக்குமா என்றும் அரசியல் ஆலோசகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எதுவாகினும் வரும் ஜனவரி மாதம் அனைத்தும் தெரியவரும்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications