தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி
Recommended Video
தூத்துக்குடி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான கனிமொழி தற்போது முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் 38 தொகுதி மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை, எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும் பாரதிய ஜனதா வேட்பாளராக கட்சியளின் மாநில தலைவைான தமிழிசை சவுந்தரராஜனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக புவனேஸ்வரன் களமிறங்கியுள்ளனர்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொன் குமரனும், நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டன்டைன் ராஜாசேகரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளரான கனிமொழி சுமார் 5000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications