ஒருதலைக்காதல்.. பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்ட வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் தூத்துக்குடி அருகே பிளஸ் 2 பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை வெட்டி காயப்படுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகாலமாகவே ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. காதல் ஏற்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசுவது தொடங்கி ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்வது கத்தியால் குத்தி கொலை செய்வது போன்ற ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

Thoothukudi police arrested man stabs Class 12 girl for spurning love proposal

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி இன்று பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார். அந்த மாணவியை ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை வழிமறித்துள்ளார். அப்போது மாணவிக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே மாணவியை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.

அரிவாள் வெட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவியை வெட்டி காயப்படுத்திய சோலையப்பனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+