தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு
தூத்துக்குடி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாகின. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் அதிமுக பிரமுகர் நடராஜன் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை சீமான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீமான் மீது தென்பாகம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் தர சீமானுக்கு ஒரு நபர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையடுத்து ஒரு நபர் கமிஷன் முன்பாக கடந்த 16-ந் தேதி சீமான் ஆஜரானார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
அச்சந்திப்பின் போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அலிபாபாவும் 40 திருடர்களும் போல என ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார் சீமான். இதனையடுத்து சீமானின் கருத்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவமதிப்பதாக கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications