கடலோரத்தில் மண்ணை துளைத்து கொண்டு எழுந்த "சூலாயுதம்".. திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஒரே சிலிர்ப்பு

கடல் அரிப்பு: அதேசமயம், இதனிடையே, கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், திருச்செந்தூரின் கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன..
ஒவ்வொரு சிலைகளும், கடற்கரையில் திடீரென எழுந்து நிற்பதை பார்க்கும்போதெல்லாம் பக்தர்கள் பரவசமாகிறார்கள்..
அந்தவகையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளது. இநத பழங்கால பொக்கிஷங்கள் அனைத்தையும் தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தபடி உள்ளனர்.
வித்தியாசமான தோற்றம்: அந்தக்கால கல்வெட்டுகளும், 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலைகளும், யாளியின் கற்சிலைகளும் வித்தியாசமான தோற்றத்தில் , மண்ணுக்கடியிலிருந்து பொக்கிஷங்கள் தென்படுவது, இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கடற்கரை மணல்: இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரை மணலுக்குள் இருந்து திடீரென சூலாயுதம் வெளிவந்துள்ளது. அதாவது, இன்று கோவில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.. அப்போது கடற்கரை மணலில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. அங்கிருந்த பக்தர்கள் அது என்னவென்று தோண்டி பார்த்துள்ளனர். ஆனால், அந்த கல் நீளமாக மண்ணுக்குள் சென்று கொண்டேயிருந்தது.
இதனால், பக்தர்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று.. அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த கல் இருந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த கல்லில் சூலாயுதம் செதுக்கப்பட்டிருந்ததை கண்டு, பக்தர்கள் சிலிர்த்து போய்விட்டார்கள்.. உடனே அதை தொட்டு வணங்கி மகிழ்ந்தனர்..சூலாயுதம் : ஏற்கனவே கடற்கரையில் கல்வெட்டுகள் கிடைத்து வந்த நிலையில், இதுவும் ஒரு கல்வெட்டாக இருக்கலாம் என்றுதான் பக்தர்கள் நினைத்தார்கள்.. ஆனால், திடீரென மண்ணை தோண்டியதுமே சூலாயுதம் வெளிவந்ததால், வந்ததால் முருகனை பார்க்க அன்னை பார்வதி சூலாயுத ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார் என்று பக்தர்கள் மெய்மறந்து வணங்குகிறார்கள்.. இந்த சூலாயுதம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications