Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலோரத்தில் மண்ணை துளைத்து கொண்டு எழுந்த "சூலாயுதம்".. திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஒரே சிலிர்ப்பு

Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் உட்கார்ந்திருந்தார்களாம்.. அப்போது திடீரென மண்ணிலிருந்து சூலாயுதம் வந்துள்ளது.. இதை பார்த்ததுமே ஒட்டுமொத்த முருக பக்தர்களுக்கும் புல்லரித்து போயுள்ளது.. என்ன நடந்தது இன்று?
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் சமீபகாலமாகவே கடல் அலையின் சீற்றம் காணப்படுகிறது.. இந்த சீற்றம் காரணமாக, கடற்கரையில் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டிருப்பதால், இது சம்பந்தமான ஆய்வுகளில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.
tiruchendur thriuchendur

கடல் அரிப்பு: அதேசமயம், இதனிடையே, கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், திருச்செந்தூரின் கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன..

ஒவ்வொரு சிலைகளும், கடற்கரையில் திடீரென எழுந்து நிற்பதை பார்க்கும்போதெல்லாம் பக்தர்கள் பரவசமாகிறார்கள்..
அந்தவகையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளது. இநத பழங்கால பொக்கிஷங்கள் அனைத்தையும் தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தபடி உள்ளனர்.

வித்தியாசமான தோற்றம்: அந்தக்கால கல்வெட்டுகளும், 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலைகளும், யாளியின் கற்சிலைகளும் வித்தியாசமான தோற்றத்தில் , மண்ணுக்கடியிலிருந்து பொக்கிஷங்கள் தென்படுவது, இணையத்திலும் வைரலாகி வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கடற்கரையில், பழனி ஆண்டவர் சிலையை கண்டதுமே பக்தர்கள் பூரித்துவிட்டார்கள்.. மரத்தினால் செய்யப்பட்ட அந்த பழனி ஆண்டவர் சிலையின் கை பகுதி சேதம் அடைந்துள்ளது.. எனினும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், திருச்செந்தூரில், பழனி ஆண்டவர் சிலையா? என்று ஆச்சரியத்துடன் வந்து பார்வையிட்டும், அந்த சிலையின் அருகில் நின்று போட்டோ எடுத்தும் மகிழ்கிறார்கள்.

கடற்கரை மணல்: இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரை மணலுக்குள் இருந்து திடீரென சூலாயுதம் வெளிவந்துள்ளது. அதாவது, இன்று கோவில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.. அப்போது கடற்கரை மணலில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. அங்கிருந்த பக்தர்கள் அது என்னவென்று தோண்டி பார்த்துள்ளனர். ஆனால், அந்த கல் நீளமாக மண்ணுக்குள் சென்று கொண்டேயிருந்தது.

இதனால், பக்தர்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று.. அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த கல் இருந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த கல்லில் சூலாயுதம் செதுக்கப்பட்டிருந்ததை கண்டு, பக்தர்கள் சிலிர்த்து போய்விட்டார்கள்.. உடனே அதை தொட்டு வணங்கி மகிழ்ந்தனர்..

சூலாயுதம் : ஏற்கனவே கடற்கரையில் கல்வெட்டுகள் கிடைத்து வந்த நிலையில், இதுவும் ஒரு கல்வெட்டாக இருக்கலாம் என்றுதான் பக்தர்கள் நினைத்தார்கள்.. ஆனால், திடீரென மண்ணை தோண்டியதுமே சூலாயுதம் வெளிவந்ததால், வந்ததால் முருகனை பார்க்க அன்னை பார்வதி சூலாயுத ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார் என்று பக்தர்கள் மெய்மறந்து வணங்குகிறார்கள்.. இந்த சூலாயுதம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+