வெளுத்து வாங்கும் மழை.. நனைந்தபடி பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள்.. விடுமுறை அறிவித்து ஆட்சியர் அதிரடி
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தனியார் பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் குமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு வழக்கம் போல் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அவர்களுக்கு பாதிப்பேதும் இல்லை.
ஆனால் தூத்துக்குடியில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமையும் இயங்குவதால் கொட்டும் மழையிலும் பள்ளிக்கு மாணவர்கள் தயாராகினர். இதுகுறித்து ஆட்சியரகத்துக்கு புகார்கள் சென்றன.
பின்னர் தனியார் பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்த நிலையில் தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் நிலவுவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications