தூத்துக்குடியை கலவர பூமியாக்க திமுக முயற்சி.. அமைதி பூங்காவாக இருக்க வேண்டும்... தமிழிசை விருப்பம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக நிர்வாகி ஒருவர் சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற சம்பவம் தெடார்பாக கவலை தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தூத்துக்குடி அமைதிபூங்காவாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில், "அனுமதி பெறாத துப்பாக்கியை பயன்படுத்தி திமுகவைச் சேர்ந்த நிர்வாகி தனது தம்பியை சுட்டுள்ளார்.
இதேபோல் அனுமதி பெறாமல் துப்பாக்கியை எத்தனை பேர் வைத்துள்ளார்கள். ஏன் இப்படி நடக்கிறது என்பது முற்றிலுமாக விவாதிக்கப்பட வேண்டும். இது உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஏதோ தூத்துக்குடி என்றாலே கலவர பூமி என்ற தோற்றத்தை திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள். அதை துடைத்தெறிய வேண்டும் என்று தான் மக்களவை தேர்தலில் எனது முயற்சியை செய்தேன்.
காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு நேராக விளக்கு எரிகிறது.. கேரளத்தில் வாக்குப் பதிவு நிறுத்தம்
எனது முயற்சி தொடரும், நிச்சயமாக தூத்துக்குடியின் மேம்பாட்டுக்கு எல்லா வகையிலும் எனது பணி இருக்கும் என்பது என்னுடைய கருத்து" இவ்வாறு கூறினார்.