Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன ஸ்டெர்லைட் நிவாரணமா? வாங்க மறுத்து டிரைவரை விரட்டியடித்த இளைஞர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களை வாங்க மறுத்த இளைஞர்கள் அதன் வாகன டிரைவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் ஆறு, குளம் நிரம்பி வழிந்தன.

Tuticorin youngsters refuses and sents back Sterlite rain relief materials

மேலும் இயல்பு அளவை விட அதிகளவில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

மொத்தம் 30க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் கால்நடைகள் இறந்தன. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மக்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளனர்.

Tuticorin youngsters refuses and sents back Sterlite rain relief materials

மேலும் தமிழக அரசு சார்பில் அதிகப்படியான வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமாக அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு சிறப்பு மருத்துவ முகாம்கள், சான்றிதழ்கள் பெறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

Tuticorin youngsters refuses and sents back Sterlite rain relief materials

இந்நிலையில் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் திரேஸ்புரம் மக்களுக்கு சரக்கு வாகனத்தில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வந்திருப்பதை அறிந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிவாரண பொருட்களை வாங்க மறுத்த நிலையில் அந்த சரக்கு வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்தனர்.

Tuticorin youngsters refuses and sents back Sterlite rain relief materials

மேலும் சரக்கு வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் டிரைவரிடம், ‛‛கொஞ்சமாவது அறிவு இருக்கா. உனது சகோதரி அல்லது குடும்பத்தில் ஒருவரை சுட்டு கொன்று இருந்தால் இப்படி தான் நடந்து கொள்வாயா? இங்கிருந்து சென்றுவிடு'' எனக்கேள்வி கேட்டு விரட்டினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அப்போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை திறக்க அதன் நிர்வாகம் முயன்று வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தூத்துக்குடி திரேஸ்புர மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களை இளைஞர்கள் வாங்காமல் விரட்டியடித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+