ஓட்டப்பிடாரம்.. அனல் பறக்கும் அக்னி நட்சத்திரத்தில் வாக்களித்த வாக்காளர் சுருண்டு விழுந்து மரணம்
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வரும் போது வாக்காளர் ஒருவர் வெயில் காரணமாக சுருண்டு விழுந்து இறந்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் கடுமையான வெயில் காரணமாக பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது.
ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சிலோன் காலனி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் வாக்களித்து விட்டு வெளியே வந்தார். அப்போது வரும்போது வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு உயிரிழந்தார்.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் முடிந்து அனல் பறக்கும் அக்னி நட்சத்திரம் காலமான இப்போது வாக்கு பதிவு நடந்ததன் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என அந்தப் பகுதி மக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications