பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்.. அல்லேரி மலைகிராமத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி
வேலூர்: வேலூரில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக மலை கிராமத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. இவரதுமனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.
இவரை கடந்த மாதம் 27ஆம் தேதி பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு வாகனத்தில் தூக்கி கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அதனால் அந்த குழந்தையை 10 கிமீ, தூரம் நடந்தே தூக்கி கொண்டு வந்தனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் தங்கள் கிராமத்திற்கு சென்ற போது சாலை வசதி இல்லாததால் பாதியிலேயே டிரைவர் இவர்களை இறக்கிவிட்டுவிட்டார். இதனால் அந்த குழந்தையை 10 கி.மீ தூரத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தின் எதிரொலியாக அல்லேரி மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார்.
அதன் படி அல்லேரி மலை கிராமத்திறகு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் அந்த கிராமத்திலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் அவர்களை கீழே அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications