குகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..!

வேலூர் அருகே 55 வயது பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மலையில் உள்ள குகைக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலமும், அதையொட்டி நடந்த மரணமும் வேலூர் மாவட்ட மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு... 42 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. கல்யாணமாகி மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்குமே கல்யாணமாகிவிட்டது..

அன்பு கட்டிட தொழிலாளி என்பதால் பல இடங்களில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது அறிமுகமானவர்தான் வத்சலா.. வேலூர் அடுத்த கருகம்பத்தூரை சேர்ந்தவர்.. கணவனை இழந்த பெண் இவர்.. ஒரே ஒரு மகள் இருக்கிறார்.. அவருக்கும் கல்யாணமாகிவிட்டது.

பழக்கம்

பழக்கம்

வயிற்று பிழைப்புக்காக வத்சலாவும் கட்டிட வேலைக்கு வரும்போதுதான் அன்பு பழக்கமானார்.. உடனே நட்பு காதலானது... காதல் தீவிரமான கள்ளக்காதலாகி உள்ளது.. இருவரும் பல முறை பல இடங்களில் ஜாலியாக இருந்துள்ளனர்.

 வத்சலா

வத்சலா

இந்நிலையில், கடந்த 7-ம் தேதியில் இருந்து வத்சலாவை காணவில்லை.. அதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்து, வேலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை நடத்தி வந்தனர்.

 பெண் பிணம்

பெண் பிணம்

அப்போதுதான், வள்ளிமலை மலை மீதுள்ள சமணர் குகையின் அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனடிப்படையில் அங்கு சென்று பார்த்தால், அந்த சடலம் அழுகி கிடந்தது.. விசாரணையில் அது காணாமல் போன வத்சலா என்பது தெரியவந்தது.. வத்சலாவுக்கு 55 வயசாகிறதாம்.. தொடர்ந்து விசாரணையை போலீசார் கையில எடுத்தனர்.. அப்போதுதான் அன்பு பெயர் அடிபட்டது.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

அவரிடம் விசாரணை நடத்தியபோது, பல பகீர் தகவல்களை தெரிவித்தார்.. கடந்த 7-ம் தேதி வத்சலாவை வள்ளிமலைக்கு அழைத்து சென்றாராம்.. குகைக்குள் ஜாலியாக இருந்தாராம்.. பிறகு கழுத்தில் கிடந்த துண்டால் வத்சலாவின் கழுத்தை நெறித்து கொன்று விட்டாராம்.. இதற்கு காரணம், தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி விதவை பெண் மேஸ்திரி அன்புவை கட்டாயப்படுத்தி வந்ததுதானாம்.

 விசாரணை

விசாரணை

இந்த வாக்குமூலத்தை அடுத்து, மேல்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து அன்புவை கைது செய்தனர்... வத்சலாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த மலை மேலேயே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே வெலவெலக்க செய்துவிட்டது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+