அதெப்படி திமிங்கலம்.. பரீட்சையே எழுதாமல் தேர்ச்சி.. வேலூரில் 10 வகுப்பு தேர்வு முடிவில் விசித்திரம்
வேலூர்: வேலூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி தேர்வு எழுதவே இல்லை என்று வந்ததால் தோல்வி அடைந்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கே வராமல் தேர்வே எழுதாத மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதிய மாணவி தோல்வியடைந்ததாகவும், பள்ளிக்கே வராத மாணவர் தேர்ச்சி பெற்றதாகவும் முடிவு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 57 பேர் தேர்வு எழுதினர். இதில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. இப்பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு எழுதியிருந்தார். இதற்கு 100 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள் என பள்ளி சார்பில் போட்டிருக்கிறார்களாம். மேலும் எழுத்துத் தேர்வில் இவர் 75 மதிப்பெண்களுக்கு 21 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி வைஷ்ணவி, தேர்வு எழுதவில்லை என வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்களாக பள்ளி பக்கமே வராமல், பொதுத்தேர்வு கூட எழுதாத தருண் என்ற மாணவர் செய்முறை தேர்வு எழுதியதாகவும், இவருக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாணவி வைஷ்ணவி அதிர்ச்சியடைந்தார்.
நேற்று உடனடியாக மாணவி வைஷ்ணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் முறையிட்டு நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு தலைமையாசிரியர் கூறுகையில், மாணவி வைஷ்ணவி செய்முறை தேர்வு எழுதியிருந்தார். அவர் தேர்வு எழுதிய பதிவுகள் பள்ளியில் இருக்கின்றன. கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக மாணவி வைஷ்ணவி பெற்ற செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் மாணவன் தருண் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.
இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழியின் கவனத்திற்கு தலைமை ஆசிரியர் கொண்டு சென்றார். இதனிடையே இது போன்ற தவறுதலான பதிவேற்றங்கள் வேலூர் மாவட்டத்தில் மேலும் 5 பள்ளிகளில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி கூறினார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications