Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் நர்சு ஜீவிதாவுக்கு மார்ச் 2ல் இனிதே திருமணம்.. ஒரே மாதத்தில் கனவில் கூட நினைக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஜீவிதாவுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு மாதத்தில் ஜீவிதா எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

கணவன் மனைவி இடையே புரிதல் இன்மை மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.. திருமணம் முடிந்தபின்னர், பொதுவாக கணவன் இல்லத்தில் தனக்கு ஆதரவாக கணவன் இல்லாமல் போனால் அல்லது மாமியார் தனக்கு எதிராக நடந்து கொண்டால் அல்லது மாமியார், மருமகளை கட்டுப்படுத்த நினைப்பது, கணவன் மனைவியின் பேச்சை கேட்காமல் மாமியார் பேச்சை மட்டும் கேட்பது,மாமியார் என்ன சொல்கிறாரோ அதனை கேட்டு நடக்க வேண்டிய நிலை இருப்பது போன்ற ஏமாற்றங்களை இன்றைய 2 கே கிட்ஸ் பெண்கள் பலர் வெறுக்கிறார்கள்.

A nurse s sudden decision within a month of marriage near Odugathur Vellore district

அதேபோல் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை இல்லாதது.. தனக்கு பிடித்த வெற்றிகரமான வாழ்க்கை அமையவில்லை என்று விரக்தி அடைவது போன்ற காரணங்களால் தவறான முடிவெடுக்கிறார்கள். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் செவிலியர் திருமணம் ஆன ஒரு மாதத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா (வயது 24) என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அதே மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன். என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

ஜீவிதாவுக்கும் சீனிவாசனுக்கும் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் சூழ இனிதே திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 1-ந் தேதி காலையில் ஜீவிதா தூக்குப்போட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜீவிதா உயிரிழந்தார்.

இது லிஸ்டிலேயே இல்லையே.. புதுச்சேரி டூ திண்டிவனம்.. டவுர் போட்ட புஷ்பாக்களை சோதித்து ஆடிப்போன போலீஸ்
இது சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆன ஒரு மாதத்தில் உயிரிழந்திருப்பதால், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+