வாணியம்பாடி நர்மதா.. காதல் கணவன் கண்முன்னே.. நடந்த கடத்தல்.. தேடும் தனிப்படை போலீஸ்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதல் கல்யாணம் செய்த ஒன்றரை மாதத்தில் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது தந்தை, அண்ணன்கள், ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதாகும் தியாகு அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சாதியைச் சேர்ந்த நர்மதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நர்மதாவும் தியாகுவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறியதுடன், கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி கல்யாணம் செய்துகொண்டார்.

இதனிடையே நர்மதாவின் பெற்றோர் தனது பெண்ணை காணவில்லை என திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் காரணமாக திருமணம் நடந்த மறுநாளே அதாவது டிசம்பர் 7-ந் தேதியே தியாகு மற்றும் நர்மதாவை போலீசார் கண்டுபிடித்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நர்மதாவை அவரது காதல் கணவர் தியாகுவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து தியாகு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தனது மனைவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தியாகுவிற்கு அழைத்த நர்மதாவின் பெற்றோர்கள் மற்றும் அண்ணன்கள் கொலை மிரட்டல் விடுத்து பேசி வந்தார்களாம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு பொங்கல் கொண்டாட மனைவியுடன் வந்திருக்கிறார்.
இந்நிலையில் நர்மதாவும் தியாகுவும் வந்திருப்பதை அறிந்த நர்மதாவின் பெற்றோர், மற்றும் அவரது உறவினர்கள், நேற்று தியாகுவின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தியாகு மற்றும் அவரின் பெற்றோரை அடித்து தள்ளிவிட்டு நர்மதாவை வலுக்கட்டயமாக கடத்திச்சென்று விட்டார்களாம்.
தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்கள் கோவிந்தராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் அந்த பகுதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கடத்திச் சென்றதாக அம்பலூர் காவல் நிலையத்தில் தியாகு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நர்மதாவை கடத்திச் சென்றதாக அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அம்பலூர் போலீசார், நர்மதா மற்றும் அவரது பெற்றோர், அண்ணன்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சாதி மாறி திருமணம் செய்த இளைஞரை தாக்கிவிட்டு, திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் கடத்தி சென்ற சம்பவம் வாணியம்பாடி சங்கராபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications