வேலூரில் கட்டிட மேஸ்திரி வீட்டிற்கு கள்ளச்சாவி.. வசமாக சிக்கிய வாணியம்பாடி வாலிபர்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: இன்றைய சூழலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் செல்வோர் கண்டிப்பாக வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் வைப்பது நல்லது. யாராவது அந்நியர் நுழைந்தால் அலர்ட் செய்யும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தினால் தான் தப்பிக்க முடியும். ஏனெனில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைக்காமல், பீரோவை உடைக்காமல் நகையை திருடியிருக்கிறார் வேலூர் திருடன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள், அங்கிருந்த கண்காணிப்பபு கேமராவால் கையும் களவுமாக ஒனரிடம் சிக்கிய, அம்பலப்பட்டு தெரித்து ஓடினார்கள். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். மொபைல் மூலம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடனை ஓடவிட்டார் அதன் உரிமையாளர். ஆனால் சென்னையில் வெளிநாடு சென்ற தொழில் அதிபர் வீட்டில் புகுந்த திருடர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். அங்கு சிசிடிவி வீட்டிற்குள் சிசிடிவி இருந்ததா என்று தெரியவில்லை.. இதேபோல் சில வீடுகளில் சிசிடிவி இல்லாததால் திருடர்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

vellore money gold

இப்போது திருடர்கள் வீட்டின் பூட்டை உடைக்காமல், பூரோவை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு நகை பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் அருகே உள்ள அன்பூண்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான 28 வயதாகும் கோகுல லட்சுமணன் என்பவரது வீட்டில், கடந்த ஜனவரி 3-ந் தேதி ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ.71 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது. ஆனால் வீட்டின் கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார்கள். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூசாமி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று பார்த்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.

அதில் திருட்டில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ் (35) என்பதும், அவர் மீது திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி 7ம் தேதி அன்று வீட்டில் இருந்த காட்வின் மோசஸை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர் கோகுலலட்சுமணன் வீட்டின் கதவு, பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை, பணத்தை திருடியதை உறுதி செய்ததுடன், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. ஆனால் வெள்ளிப் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் ரூ.71 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் செலவு செய்துவிட்டதாக கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+