வேலூர் அருகே 9 கிரகமும் உச்சம் பெற்றவர்.. ராணிப்பேட்டை எஸ்பியால் 31 வருடம் கழித்து சிக்கியது எப்படி?
வேலூர்: 1994ம் ஆண்டு பழைய வேலூர் ஜில்லாவில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் ஒன்றாகவே இருந்தன. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது வரை ஒன்றாகவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணியாற்றிய பாஸ்கர்ஜோதி கோகோய் 31 வருடம் கழித்து ஏஐ தொழில் நுட்பத்தால் சிக்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் வேலை செய்து வந்தவர் சவுத்ரி. இவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கர்ஜோதி கோகோய் என்பவர் வேலைசெய்து வந்தார். சவுத்ரியின் மனைவி ஜெயஸ்ரீ கடந்த 1994-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ஜெயஸ்ரீயை கொலை செய்ததாக அவரது கணவர் சவுத்ரிக்கு 2005-ம் ஆண்டு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான சவுத்ரியுடன் வேலை செய்து வந்த பாஸ்கர் ஜோதி கோகோய் தலை மறைவானார். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா பழைய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பாஸ்கர்ஜோதி கோகோய் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பாஸ்கர் ஜோதி கோகோயை பிடிக்க அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாஸ்கர் ஜோதி கோகோயின் சொந்த மாநிலமான அசாம் மாநிலத்திற்கு சென்றனர். திப்ருகர் நகர் அடுத்த சபூவா கிராமத்தில் கோகோய் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர், புகைப்படத்தை வைத்து, அவரை போலீசார் உறுதி செய்தனர். கோகோய் தப்பிசென்ற போது அவருக்கு 21 வயது. ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் அவருடைய இப்போதைய படத்தை போலீசார் வரைந்தனர். பின்னர் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோகோய்யை சபூவா கிராமத்தில் மடக்கிப்பிடித்து, போலீசார் கைது செய்து, அழைத்து வந்தனர். கொலை வழக்கில் 31 வருடம் தப்பித்து வாழ்ந்து வந்தவர், இப்போது ராணிப்பேட்டை எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கையால் சிக்கியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications