மாரியாத்தா கண் திறந்துச்சாமே.. கருவிழியெல்லாம் தெரிந்ததாக பக்தர்கள் வியப்பு.. வேலூரில் பரபரப்பு
வேலூர் அருகே அம்மன் சிலை கண் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

வேலூர்: மாரியாத்தா திடீர்னு கண் திறந்துச்சாமே... என்ற தகவல்தான் வேலூர் மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது.
காட்பாடி அருகே செங்குட்டை பஜனை கோயில் தெருவில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.
சக்தி வாய்ந்த அம்மன் இந்த ஆலயத்தில் குடியிருப்பதாக அந்த பகுதி மக்களால் நீண்ட காலமாகவே அதிகமாக நம்பப்பட்டு வருகிறது.

பூஜை வழிபாடு
இப்போது மார்கழி மாதம் என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. அப்படித்தான் கோயிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். மாரியம்மன் கோவில் என்பதால் பெண்களும் நிறைய பேர் இந்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

கண் திறந்தது
அப்போது திடீரென அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவ தொடங்கியது. இதனால் ஊரே பரபரப்பாகி விட்டது. "அம்மன் சாமி கண் திறந்துடுச்சாமே" என்று கேட்டுக் கொண்டே மக்கள் கூட்டம் கூட்டமாக மாரியம்மன் கோயிலுக்கு வர ஆரம்பித்துவிட்டனர்.

பிரகாசமான கண்கள்
சிறிது நேரத்தில் கோயில் கூட்டத்தால் வழிந்து நிறைந்தது. மனிதர்களை போலவே கருவிழி, விழி வெண்படலம் போன்று அம்மன் கண் இருந்ததாகவும், மக்களை நேருக்கு நேர் கண்களை திறந்து பிரகாசமாக அம்மன் பார்ப்பது போல இருந்ததாகவும் பக்தர்கள் பரவசப்பட்டு ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டார்கள்.

சாமி ஆடினர்
இதனால் பக்தர்கள் அம்மனை பார்த்து தேங்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். சூடம் ஏற்றி வழிபாடு ஒரு பக்கம் நடத்த துவங்கினர். இதுஎல்லாவற்றிற்கும் மேலாக சில பெண்கள் திடீர் "சாமி" வந்து தங்களையும் மறந்து பக்தி பரவசத்துடன் ஆட ஆரம்பித்துவிட்டனர்.

பெரும் பரபரப்பு
திடீரென அம்மன் கண் திறந்ததாக வந்த தகவலால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரளவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications