குடிநீருக்காக போராடிய மக்கள் ..சட்டவிரோதமாக கூடியதாக வழக்கு.. காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தற்போது நாடு முழுவதுமே ஒரே குரலில் பேசும் பொருளாக மாறியுள்ளது தண்ணீர். கடந்த 3 மாதங்களாக வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகள், அணைகள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

இதனையடுத்து குடிநீர் தேவையை சமாளிக்க ஆங்காங்கே நிலத்தடி நீரை பயன்படுத்த துவங்கினர். கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் மிக அதிக அளவில் உறிஞ்சப்பட்டதால், ஒருகட்டத்தில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி தண்ணீருக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வேலம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
இதே போல திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்களும் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
ஆம்பூர் அருகேயுள்ள பேரணாம்பட்டு ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சில மாதங்களாக கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊராட்சி செயலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
ஆனால் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நேற்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட, துத்திப்பட்டு கிராம மக்கள் மீது தான் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 20 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஒன்று கூடி மறியல் செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications