Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சூர்யாவின் ஜெய் பீம் படத்தை.. நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்..' மத்திய அமைச்சர் பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் நடைபெற்ற சமநீதி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.

Recommended Video

    JaiBhim படத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் - அமைச்சர் Ramdas Athawale பேச்சு | Oneindia Tamil

    ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ஜெய் பீம். இத்திரைப்படம் தீபாவளி சமயத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

    ஜெய் பீம் வெளியான போதே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர்.

     ஜெய் பீம்

    ஜெய் பீம்

    மேலும் IMDB தளத்திலும் இப்படம் பல ஹாலிவுட் திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளியிருந்தது. இந்தச் சூழலில் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் குற்றம் செய்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையிலான சின்னம் இருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது. இருப்பினும், சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

     வருத்தம் தெரிவித்த இயக்குநர்

    வருத்தம் தெரிவித்த இயக்குநர்

    நாளுக்கு நாள் இந்தச் சர்ச்சை பூதாகரமாகி வரும் சூழலில் ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தனக்கு எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

     சமநீதி மாநாடு

    சமநீதி மாநாடு

    இந்தச் சூழலில் வேலூரில் நடைபெற்ற சமநீதி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி அருகில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சூசை தலைமையில் சமநீதி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தலின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

     ஜெய் பீம்

    ஜெய் பீம்

    இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "தமிழில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நல்ல திரைப்படம். அந்த குழுவினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இதனை பிற மொழிகளில் மொழிபெயர்த்தாலும் அதனை வரவேற்கிறோம். திரைப்படத்தின் நடிகர், இயக்குநர் ஆகியோர்களுக்கு இந்தியக் குடியரசு கட்சி பாதுகாப்பாக இருக்கும்" என்று பேசினார்,

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+