வேலூர் புருஷோத்தமனின் மனைவிக்கு வந்த பொல்லாத கோபம்.. காலையிலேயே தெறித்து ஓடிய மாமியார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்திருந்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே நேற்று காலை வாய்த்தகாராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மருமகள் மாமியாரை என்ன செய்தார் தெரியுமா?

மாமியார் மருமகள் சண்டை என்பது பல வருடங்களாக தொடர்கிறது. மாமியார் மருமகள் பிரச்சனைகள் இன்றி இருந்தால் அதிசயம் என்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. ஏன் மாமியாருடன் மருமகள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தாலே இந்த காலத்தில் அதிசயம் தான். ஏனெனில் அந்த அளவிற்கு உறவுச்சிக்கல் அதிகரித்துவிட்டது. அப்படி ஒரு மாமியார் மருமகள் சண்டையை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

ranipet

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோயிலைச் சேர்ந்த 36 வயதாகும் புருஷோத்தமன் என்பவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், சென்னை பெரம்பலூரைச் சேர்ந்த 33 வயதாகும் ஜெகதீஸ்வரி என்பவரை பல வருடம் முன்பு காதலித்துள்ளார். இதில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் சம்மதமின்றி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில், புருஷோத்தமனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அவ்வப்போது தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மீண்டும் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆவேசமடைந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மனைவி அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறது.

இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கும், அவரது மாமியார் கொள்ளாபுரி (63) என்பவருக்கும் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி, மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் அறுத்துவிட்டாராம். இதனால் அலறி துடித்த கொள்ளாபுரியை அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக கொள்ளாபுரி அவளூர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருமகள் ஜெகதீஸ்வரியை கைது செய்தனர். பின்னர் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகதீஸ்வரி விடுவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+