ஸ்டாலினுக்கு தெரியும்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவி செய்வது இதனால் தான்.. விளாசிய கே.பி.முனுசாமி!
வேலூர் : எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தடுக்க, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக உதவுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ் என கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்ட புகழேந்திக்கு அதிமுகவைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை என கூறியுள்ளார் கே.பி.முனுசாமி.
வேலூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி கற்பகம் இல்ல நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.

மேடைப் பேச்சாளர் போல
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ். நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் பதவியை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார். இது கட்சியின் தலைமையில் இருந்தவர் பேசுவது போல் இல்லை. கட்சியின் பேச்சாளர் மேடையில் பேசுவது போல் இருக்கிறது.

மாற்றி மாற்றி
கட்சி ஒரு தனிநபர் கையிலும், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சென்று விடக்கூடாது என்று அன்று கூறித்தான் தர்ம யுத்தம் நடத்தினீர்கள். நானும் உங்களுடன் இருந்தேன். கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் இன்று அவருடன் பேசுவேன், அவர்களை சேர்த்துக் கொள்வேன் என்று ஏன் சொல்கிறார்?

ஸ்டாலின் மறைமுகமாக
இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றான தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால்தான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். நம்மை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய பலம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அவருக்குத் தெரிகிறது.

ஈபிஎஸ்ஸுக்கு எதிராக
கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இரட்டை வேடம் போட்டு வருகிறார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசியலில் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒருபக்கமாக உள்ளனர்.

30 எம்.எல்.ஏக்கள்
30, 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் செய்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட ஈபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாகத்தான் உள்ளனர்." எனத் தெரிவித்தார்.

புகழேந்தி யார்?
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, "புகழேந்தி என்பவர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவராலும் இணைந்து கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் புகழேந்தி. அவர் இப்போது எந்த கட்சியில் உள்ளார்? தற்போது ஓபிஎஸ் அருகில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து வருகிறார் புகழேந்தி. அவருக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. அவரைப் பற்றி கேள்வி கேட்பதே அபத்தம்." எனத் தெரிவித்தார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications