வேலூர்: 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி.. ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. தத்தளிக்கும் மக்கள்
சதுப்பேரி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்
வேலூர் : வேலூரில் சதுப்பேரி உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஊருக்குள் நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருபக்கம் தென்மேற்கு பருவ மழை, இன்னொரு பக்கம் வடகிழக்கு பருவமழை என மாறி மாறி கொட்டி கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது..
அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கிறது.. முக்கிய நீர்நிலைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தது சதுப்பேரி ஆகும்.

நிரம்பியது
சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சதுப்பேரிதான் நீராதாரம்.. 621 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இந்த ஏரி.. அதிக அளவு மழை காரணமாக, சதுப்பேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது.. அதாவது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு சதுப்பேரி நிரம்பி வழிகிறது. இதனால் சதுப்பேரியை ஒட்டியுள்ள சதுப்பேரி கிராமத்தில் நீர் புகுந்துள்ளது..

சதுப்பேரி
ஏரியை ஒட்டியே வீடுகளை இங்கு கட்டி உள்ளனர்.. சதுப்பேரி 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய் பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர் வெளியே செல்ல முடியவில்லை.. எனவே, அருகில் இருக்கும் கொணவட்டம் நேதாஜி தெருவில் வெள்ள நீர் புகுந்துவிட்டது.. இங்குள்ள குடியிருப்புவாசிகள் இதனால் அவதிக்குள்ளாகி உள்ளனர்...

வேண்டுகோள்
வீட்டை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை.. மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் இவர்களுக்கு எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்காமல் உணவு கூட வழங்காமல் அலைகழித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களை, உடனடியாக மீட்டு திருமண மண்டபங்களிலோ அல்லது பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நடவடிக்கை
அதேபோல, 20 கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியின் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இங்கிருந்த இணைப்புக்கால்வாய்கள் காணாமல் போயுள்ள நிலையில், அதை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications