துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்திய போது கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் ரெய்டு!
Recommended Video
வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்தி நகரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு அதிகாலை 3 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்த வந்தனர்.
அதிகாலையில் சோதனை நடத்த வந்ததால் அங்கு அதிகாரிகளுடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே சென்ற அதிகாரிகள் காலை 5.30 மணி வரை சோதனை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.
திமுக 'கஜானாவிலேயே' கை வைத்த வருமான வரித் துறை.. அரசியலின் அடுத்த பரபரப்பு
இந்த இடைப்பட்ட நேரத்தில் துரைமுருகனின் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான சிபிஎஸ்இ பள்ளி மற்றும் கல்லூரியிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.