கடவுள்களை கொச்சைப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்… முதலமைச்சர் பழனிசாமி காட்டம்
வேலூர்: கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் வள்ளலார் பகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அப்போது, தாம் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் துயர் தெரியும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், ஸ்டாலின் பேண்ட் சட்டை, ஷூ அணிந்து ஏர் உழுததாகவும் அவர் நவீன விவசாயி என்றும் கிண்டல் செய்தார்.
திமுக கூட்டணி வித்தியாசமான கொள்கை உள்ள கூட்டணி என்றும் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் இந்தத் தேர்தலை நாம் சந்திக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
[முக்கிய வேட்பாளர்களின் களம்.. பெரிய கட்சிகளின் டார்கெட்.. சென்னை மத்திய தொகுதியின் சிறப்பம்சம்!]
திமுக தலைவர் ஸ்டாலின், கடவுள்களை கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னை தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு விளம்பர எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம்செய்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications