பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற வேலூர் கணியம்பாடி கிராம பெண்கள்.. தண்ணீரை காக்க அசத்தல் முயற்சி
வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கீ பாத் உரையில், வேலூர் கணியம்பாடி வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து நாகநதியை காப்பற்ற களம் இறங்கியதை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். தண்ணீர் பிரச்னையை தீர்க்க உறைகிணறுகள் அமைத்துக்காக கிராம மக்களை பிரதமர் பாராட்டி உள்ளார்.
தண்ணீர் பிரச்னையால் நாடே தவித்து வரும இன்றை சூழலில் பல ஊடகங்களால் கவனிக்கப்படாத ஒரு விஷயத்தை பிரதமர் மோடி கவனித்து இருக்கிறார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் நாகநதியை காக்க மக்கள் நடத்திவரும் முயற்சியை வெகுவாக பாராட்டி பிரதமர் மோடி பேசி உள்ளார்.

பிரதமர் மோடி வானொலியில் மான் கீ பாத் உரையில் பேசும் போது, வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டாரத்தில் நாக நதியில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுவதாக குறிப்பிட்டார்.
ஆறு செல்லும் நீர் வழிப்பாதையில் 100 மீட்டர் இடைவெளியில், 6 அடி அகலம், 15 அடி நீளம், 20 அடி ஆழத்துக்கு கிணறுகள் அமைக்கப்படுவதாகவும் , இந்த செறிவூட்டும் கிணறுக்குள் மழை நீரை அனுப்ப தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளதகாவும் மோடி குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சியின் முகமையின் கீழ் 20,000 பெண்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும்,. இதனால் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சொல்வது போல் நாகநதியை காக்க கடந்த 5 ஆண்டுகளாக 20 ஆயிரம் பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இந்த நதியின் குறுக்கே 350 செறிவூட்டும் கிணறுகளும், 210 செக் டேம்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கிணறுகள் அமைக்கப்பட்டதால் வேலூர் கணியம்பாடி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications