பூட்ஸ் மீது தொப்பியை வைத்துவிட்டு டூட்டி பார்த்த போலீஸ்... சமூகவலைதளத்தில் வைரல்!
Recommended Video
வேலூர் : பணி நேரத்தில் தரையில் இருந்த பூட்ஸ் மீது தனது தொப்பியை வைத்துவிட்டு அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. தொப்பிக்கு போலீஸ்காரர் அளிக்கும் இந்த மரியாதை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துக்கொண்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஆலங்காயம் காவல் நிலைய உதவிஆய்வாளர் தேவராஜ் நிகழ்ச்சி நடைபெற்றமண்டபத்திற்கு வெளியில் போடப்பட்டிருந்த சேரில் சக காவலர்களுடன் அமர்ந்திருந்தார்.
இதற்காக அவர் சர்ச்சையில் சிக்கவில்லை டூட்டியில் இருந்தவர் காலில் இருந்த பூட்டிஸை காட்டி தரையில் வைத்து அதக் மீது போலீஸ் தொப்பியையும் வைத்துவிட்டார். போலீஸ்காரர்கள் கர்வத்துடன் தலையில் அணியும் தொப்பியை உதவி ஆய்வாளர் பூட்ஸ் மீது வைத்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. உதவி ஆய்வாளரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.