களமிறங்குகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி... வேலூரில் தொண்டர்கள் எதிர்பார்ப்பு
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்ற பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதனால், என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளனர்.

வருகிற 29ஆம் தேதி காலை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின் மாலையில் ஆம்பூரில் வாக்கு சேகரிக்கிறார். 30ஆம் தேதி காலை குடியாத்தத்திலும் மாலை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியிலும் கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 31ஆம் தேதி காலை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின் மாலையில் வேலூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
அதே சமயம், வேலூர் மக்களவை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். முதல்கட்டமாக 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் உழவர் சந்தை பகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடை பயணமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொரப்பாடி உழவர் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications