யார் அந்த வேலூர் பெண்? பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் இப்படியுமா செய்வாங்க?
வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நெபுலைசர் கருவியை பெண் ஒருவர் திருடி செல்லும் சிசிடி காட்சி வெளியாகி உள்ளது. இதுவரை மூன்று முறை திருடு போயிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எனவே பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன் உயர்தரமாக கட்டப்பட்டு தற்போது அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை மூன்று முறை நெபுலைசர் (சுவாச கருவி) திருடுபோய் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் புகார் ஏதும் கொடுக்காமல் புதிதாக வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நோயாளியாக ஒன்றாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்திருந்த நெபுலைசரை (சுவாச கருவி) திருடி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அரசு மருத்துவமனைக்குள் நோயாளிகள் பயன்படுத்தும் நெபுலைசர் (சுவாச கருவி) திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே அரவட்லா மலை பாதையில் பேரணாம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் டுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்தி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்களிடம் 500 கர்நாடகா மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 500 கர்நாடகா மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு போலீசார்பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் (23) வசந்தராஜ்( 25 )ஆகியோரையும் மேலும் கர்நாடகா மது விற்பனையில் ஈடுபட்ட நாகராஜ் (47 ) ஆகிய மூன்று பேரை கைது செய்த பேரணாம்பட்டு போலீசார் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications