வேலூரில் முட்டி போட்டபடி "பிளேடு" எடுத்த மேஸ்திரி.. குடியாத்தம் கோயிலில் சாமி கும்பிட்டு.. கொடுமை
வேலூர்: குடியாத்தத்தின் புகழ்வாய்ந்த கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது. கோயிலில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையை, போலீசார் உடனடியாக மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்தவர் மனோகரன்.. 48 வயதாகிறது.. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார். மனைவி பெயர் புஷ்பா.. இந்த தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை மனோகரன், கோபாலபுரம் பகுதியிலுள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோவிலுக்கு சென்றார்.. குடியாத்தத்திலேயே மிகவும் புகழ் பெற்ற கோயில் இதுவாகும்.. இந்த கோயிலுக்குள் நுழைந்த மனோகரன், உள்ளே சென்றாமல், சற்று தொலைவிலிருந்தே கற்பூரத்தை ஏற்றிவைத்தார்.. பிறகு முட்டி போட்டபடியே, தூரத்திலிருந்து அம்மனை நோக்கி கும்பிட்டார்.
தற்கொலை: பிறகு அடுத்த சில நிமிடங்களிலேயே தற்கொலைக்கும் முயன்றார்.. இதைப்பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து தற்கொலைக்கு முயன்ற மனோகரை தடுத்து நிறுத்தினார்கள்.. ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் மனோகரன் கீழே சுருண்டு விழுந்தார்..
பிறகு, பொதுமக்களும் சேர்ந்து, மனோகரனை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர்... முதலுதவி சிகிச்சை பிறகு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்..
தீவிர சிகிச்சை: அங்கு மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினார்கள். பிறகு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது மனோகரன், பிரார்த்தனை செய்துவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டது அதில் பதிவாகி இருந்தது.
கடந்த சில நாட்களாகவே மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தாராம்.. அப்போது, தன்னை யாரோ கூப்பிடுகிறார்கள் என்று சொல்லி கொண்டே இருந்தாராம்.. ஆனாலும், எதற்காக அவர் கோயிலுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.
கலங்கடித்த வீடியோ: ஆனால், கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்த காட்சிகள், வெளியாகி பொதுமக்களை பதற செய்து வருகிறது.. மனோகரன் முட்டி போட்டு சாமி கும்பிடுவதும், பிறகு தற்கொலைக்கு முயல்வதும், அதை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நகர்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..
குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் வளாகத்திலேயே, கட்டிட மேஸ்திரியின் இந்த தற்கொலை முயற்சி வேலூர் மாவட்டத்தில் பரபரப்பையும், பரிதாபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications