ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கொள்ளை.. க்ளூவாக கிடைத்த ருத்ராட்ச மாலை.. தட்டி தூக்கிய போலீஸ்!
வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிய டீக்காராமனை போலீஸார் கைது செய்ததற்கு முக்கிய ஒரு க்ளூதான் காரணம்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி சாலையில் பிரபல நகைக் கடை அமைந்துள்ளது. இந்த கடை 5 மாடிகளை கொண்டதாகும். எனினும் தரைத் தளம், முதல் தளத்தில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது.
கடையின் 5-ஆவது மாடியில் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கியுள்ளார்கள். அது போல் இரவு நேர பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் 15-ஆம் தேதி திருடர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டனர்.

விசாரணை
இதையடுத்து திருடிவிட்டு அதே வழியில் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயுள்ளதாக கூறுகிறார்கள். இதன் மதிப்பு ரூ 7 கோடியாகும். கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டன.

நகைக் கடைகள்
அதில் ஒருவர் முகமூடியை அணிந்து கொண்டு நகைக் கடைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் அங்கிருந்த அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரேவை அடித்துவிட்டதால் எந்த காட்சிகளும் பதிவாகாமல் போய்விட்டது. இதையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக பள்ளிகொண்டாவை சேர்ந்த டீக்காராமன் கைது செய்யப்பட்டார்.

முகமூடி
அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. இந்த குற்றச்சம்பவத்தை எப்படி நிகழ்த்தினார் என்பது குறித்து நடித்து காட்டுமாறு போலீஸார் தெரிவித்தனர். மேலும் சிங்க முகமூடியிலிருந்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது உள்ளூர் குற்றவாளிகள்தான் இப்படி அடையாளத்தை மறைக்க முற்படுவர். வடமாநில குற்றவாளிகளாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்ற கணிப்பின்படி விசாரணையை தொடங்கினர்.
Recommended Video

நகைக் கடை
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கூறுகையில் நகைக்கடையை சுற்றியுள்ள கேமராக்களை ஆய்வு செய்து ஒருவரை தொடர்ந்து பாலோ செய்தோம். கடைசியில் அவர்தான் குற்றவாளி என தெரிந்தவுடன் அவரை கைது செய்தோம். கொள்ளை போன நகைகளில் ருத்ராட்ச மாலையும் இருந்தது. டீக்காராமன் சிவன் பக்தர். பிடிபட்ட போது ருத்ராட்ச மாலையை தன் கழுத்தில் அணிந்திருந்தார். மற்ற நகைகளை புதைத்துவிட்டார். ருத்ராட்சத்தை பார்த்தவுடன்தான் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications