வேலூரில் தாசில்தார் கிளம்பிட்டாரு.. 5 சென்ட் நிலம், பட்டா.. கலெக்டர் ஆபீசில் பெண்ணால் துடித்த டிஆர்ஓ

Subscribe to Oneindia Tamil

வேலூர்: 21 வருடங்களாக பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்... எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொந்தளித்துள்ளது, மாவட்ட மக்களின் கவனத்தையும் திருப்பி வருகிறது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் வழக்கம்போல் நேற்றைய தினமும் நடைபெற்றது.. டிஆர்ஓ மாலதி உள்பட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

vellore tahsildar patta

அப்போது யசோதா என்ற பெண்ணும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு தருவதற்காக வந்திருந்தார்.. வேலூர் அடுத்த பொய்கை சமத்துவபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜீவா என்பவரின் மனைவிதான் யசோதா.. 44 வயதாகிறது..

பாதுகாப்பு போலீசார்: கூட்ட அரங்கம் எதிரே கையில் ஒரு பையை எடுத்து வந்தார்.. அந்த பையில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

இதைப்பார்த்து பதறிப்போன அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு தண்ணீரை அவர் மீது ஊற்றினார்கள்.. அதற்குள் இந்த விஷயம் டிஆர்ஓ மாலதிக்கு தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக யசோதாவிடம் விசாரணை நடத்தினார்.

5 சென்ட் நிலம்: அவரிடம் யசோதா சொல்லும்போது, "நான் என்னுடைய கணவர் மற்றும் 2 மகள்களுடன் பொய்கை சமத்துவபுரத்தில் வசிக்கிறேன். சமத்துவபுரத்தில் எங்களுக்கு 5 சென்ட் நிலத்துடன் அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் எங்களின் பின்புற வீட்டுக்காரர், எங்களுக்கான பட்டா ஆதாரத்தை காட்டுங்கள். இல்லைவிட்டால் காலி செய்யுங்கள் என்று மிரட்டல் விடுக்கிறார்.

எங்களின் இடத்தை அவர் அபகரிக்க பார்க்கிறார்... நான் கடந்த 21 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை மனுக்களை அளித்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.. அதிகாரிகள் அலைக்கழித்து வருகிறார்கள்.. எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் சொன்னார்.

அட்வைஸ்: இதனை தொடர்ந்து டிஆர்ஓ மாலதி சொல்லும்போது, "நாளைக்கே உங்கள் வீட்டுக்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்துவார்கள். அதற்குபிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விபரீதமான செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது" என்று அறிவுரை தந்து யசோதாவை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+