Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அரசு ஊழியராக ஆசையா? நெருங்கும் குரூப்-2 தேர்வு.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், விரைவில் ஒவ்வொரு மாவட்டததில் தொடங்கப்பட இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெற முடியும். இதுபற்றி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்ட அறிவிப்பினை பார்க்கலாம்.

குரூப்-2 போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பற்றி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-II, IIA 2025-ம் ஆண்டு 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலை போட்டித்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். போன்ற மத்திய அரசு போட்டித்தேர்வு முகமை.

Want to become a government employee in Tamil Nadu Government s super announcement over Group-2

டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., எம்.ஆர்.பி. போன்ற மாநில அரசு போட்டி தேர்வு முகமை, பொதுத்துறை நிறுவனம் மற்றும் முப்படைகளின் காலிப் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் அதிகளவிலான வகுப்பு தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலைநாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-291400, மின்னஞ்சல் முகவரி [email protected]யில் மற்றும் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல, வேலூர்,திருப்பத்தூர் சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருச்சி, என தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி வககுப்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பயிற்சி பெற்று அரசு அதிகாரிகளாக மாறலாம். அதற்கு முயற்சி தான் முதல் படியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+