வேலூர் புதுப்பெண் பவித்ரா.. சூப்பர் மார்க்கெட் ஓனர் கணவர்.. சின்ன விஷயத்தால் நொறுங்கிய குடும்பம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் பவித்ராவுக்கும், அதே பகுதியில் உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சந்தோஷ், தனது மனைவி பவித்ராவுக்கு பொங்கலுக்கு புதுப்புடவை வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பவித்ரா எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.

இன்றைய 2 கே கிட்ஸ் தம்பதிகள் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளை எப்படி தீர்ப்பது என்று யோசிக்காமல், வாழ்க்கையில் அவ்வளவு தான் இனி ஒன்றுமில்லை என்று நினைத்து தவறு செய்கிறார்கள். சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளால் திடீரென உடைந்து போய், உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கிறார்கள்.

vellore tirupattur marriage

அப்படி எடுக்கும் முடிவுகள் அவரது வாழ்க்கையை மட்டுமல்ல..அவரை சார்ந்துள்ளவர்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது. குறிப்பாக சுற்றியுள்ள உறவுகள், சூழல்களை பற்றி சற்றும் யோசிக்காமல் எடுக்கும் முடிவு குடும்பத்தையே கலங்க வைத்துவிடுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மனைவி எடுத்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் பவித்ரா. இவருக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி, ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சாமன்னன் என்பவரின் மகன் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

சந்தோஷ் பக்கிரிதக்கா பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவித்ரா தனது கணவரிடம், தன்னை தனியாக அழைத்து சென்று பொங்கலுக்கு புதுப்புடவை எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால் புதுப்பெண் பவித்ரா கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான ஏலகிரி கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு கடந்த ஜனவரி 9ம் தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு உயிரைவிட்டார். மனைவி இறந்த தகவல் அறிந்ததும் சந்தோஷ் விஷம் குடித்து உயிரை மாயத்துக் கொள்ள முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுப்புடவை பிரச்சனையில் குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+