அரக்கோணம் இன்ஸ்பெக்டர்.. சொந்த ஊருக்கு போன மனைவி.. விடியற்காலையில் வீட்டுக்குள் கண்ட காட்சி
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தாக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுனில்குமார். இவர் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊருக்கு போய்விட்டார். இதனால் விரக்தியில் விடியற்காலையில் செய்த செயலால் மொத்த குடியிருப்பு பகுதியும் ஆடிப்போனது.
கணவன் மனைவி இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்த்தால் சரியாகிவிடும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளை சரி செய்யவே முடியாத அளவிற்கு யாராவது ஒருவர் பிடிவாதமாக இருப்பார்கள். மனைவி சில நேரங்களில் இறங்கி வரமாட்டார். சில நேரங்களில் கணவர் இறங்கிவரமாட்டார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு பிரச்சனைகளை பேசி தீர்த்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

ஆனால் தவறு செய்தவர்களை குற்றம்சாட்டும் அதேநேரம் குடும்ப உறவை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், குடும்பமே உடைந்து போக சிலரது செயல்கள் காரணமாக இருக்கிறது. பல நேரங்களில் கணவன் மனைவி இடையே சண்டைக்கு குடும்ப உறவுகள் காரணமாக இருக்கின்றன. இந்த சண்டைகளை தவிர்க்க ஒருவரை ஒருவர் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலே உறவு நிலைக்கும். இல்லாவிட்டால் நாம் நினைக்காத அளவிற்கு வேகமாக உறவுகள் முறிந்தவிடும். அப்படிப்பட்ட சூழலில் பலர் தவறான முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருத்துவேறுபாடு காரணமாக மனைவி ஊருக்கு சென்ற விரக்தியில் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் உயிரையே விட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த 48 வயதாகும் சுனில்குமார் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விசாலாட்சியம்மாள். இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.. மற்றொரு மகன் தக்கோலம் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்.. இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தனது குடும்பத்துடன் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையம் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
அண்மையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவி விசாலாட்சியம்மாள் அவரது ஊருக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சுனில்குமார் தனது 2-வது மகனுடன் விரக்தியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று விடியற்காலை அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்த தக்கோலம் போலீசார் நேரில் சென்று சுனில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் அரக்கோணம் இன்ஸ்பெக்டர் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications