Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோலார்பேட்டையில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்.. முன்னாள் ராணுவ வீரர் செய்த அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், சில நேரங்களில் தெரிந்தவர்களால் , உறவினர்களால், அண்டை வீட்டாரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முன்னாள் ராணுவ வீரர் அத்துமிதிதாக புகார் எழுந்தது அந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், சில நேரங்களில் குழந்தைகள் , மிகவும் தெரிந்த நபர்களால் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் அத்துமீர்களுக்கு உள்ளாக்கப்படுவது நடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் இந்த பிரச்சனையை வெளியில் சொல்லத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு தெரிந்தவர்களை மிக மோசமான அத்துமீறல்கள் ஈடுபடுவது நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Jolarpettai Tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த (22) மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணின் தாயார் மளிகை கடைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஏலகிரி கிராமம் மூடன் வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (39) இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பவர், இளம் பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அத்துமிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்துமீறியது தெரியவந்தது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முன்னாள் ராணுவ வீரர் மீட்டு ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து இளம்பெண் தாயார் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜோலார்பேட்டை பகுதியில் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை இளம்பெண்களுக்கு கடந்த சில நாட்களில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+