For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து 20 பவுன் கொள்ளை.. மர்மநபர்கள் துணிகரம்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் ரத்னா நகரில் வசித்து வருபவர் கலை செல்வராஜன். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கண்காணிப்பாளராக அணி புரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் தன் மனைவியுடன் பகல் நேரத்தில் வெளியில் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய கலை, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

English summary
Near Theni, some unknown persons have stolen 20 sovereigns gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X