For Daily Alerts
Just In
கர்நாடக பந்த்.. மூடப்பட்ட கடைகள்.. வெறிச்சோடிய பனர்கட்டா மெயின் ரோடு-வீடியோ
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பெங்களூருவின் நுழைவு வாயிலான பனர்கட்டா பிரதான சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வாகனங்கள் எப்போதும் இந்த சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால் மற்ற நாட்களில் இங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். ஆனால் இன்று முழு அடைப்புப் போராட்டம் காரணமாக இந்தச் சாலை அரிதாக ஒரு சில வாகனங்களைத் தவிர காலியாக காணப்படுகிறது.
வீடியோ:
Comments
cauvery issue karnataka bengaluru oneindia tamil videos காவிரி விவகாரம் கர்நாடகா கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டம்
English summary
Because of Banth in Karnataka, the attibele region in Bengaluru high way is traffic less.