போதிய பணமில்லை... போஸ்ட் ஆபிசிற்கு ‘புதிய நோட்டு’ மாற்றச் சென்ற மக்கள் ஏமாற்றம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாதது ஆகிவிட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்று முதல் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை முதலே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். ஆனால், பெரும்பாலான தபால் நிலையங்களில் போதிய பணம் இல்லை எனக் கூறி மக்கள் எதிர்பார்த்ததற்கும் குறைவாகவே புதிய நோட்டுகள் கிடைத்தன. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications