வங்கியில் வரிசை... ஏடிஎம் வாசலில் காத்திருப்பு... 8வது நாளாக தொடரும் வேதனை- வீடியோ
வங்கியில் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரல்களில் மை வைப்பது ஒருபுறம் இருக்க, இனி 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஒரு வாரத்திற்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்றால் அதை வைத்து என்ன செய்வது என்று வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். நவம்பர் 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 10ம் தேதியன்று முதல் வங்கிகளில் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் மாற்றித் தரப்படுகின்றன.
பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், புதிய நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 8 நாட்களுக்கும் மேலாக வங்கி வாசல்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அனைத்து வங்கிகளிலுமே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications