தமிழகத்தில் நடைபெறுவது கடன்கார ஆட்சி: எ.ம.வேலு கடும் தாக்கு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.ம.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில் திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரவக்குறிச்சி, வேலாயுதபாளையத்தில் திமுக பிரச்சார
கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக முன்னாள் அமைச்சர் எ.ம.வேலு பேசுகையில், தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே இரண்டரை லட்சம் கடனை மக்கள் மீது தமிழக அரசு சுமத்தியுள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications