வாடிய ‘மஞ்சள்’ பயிர்... சோகத்தில் ஈரோடு விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம். இவர் தனது நிலத்தில் கடன் வாங்கி மஞ்சள் பயிரிட்டிருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி காலிங்கராயன் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால் அவரது மஞ்சள் பயிர் கருகியது. இதைக் கண்டு மனமுடைந்த ராமலிங்கம், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், இது போன்று விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications