For Daily Alerts
Just In
3வது நாளாக ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் கூட்டம்.. மொட்டையடித்து அஞ்சலி- வீடியோ
சென்னை: தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவரது நினைவிடத்திலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக, அவரது நினைவிடத்துக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அங்கு பெண்கள் உள்பட நிறைய பேர், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
Comments
jayalalitha marina beach tonsure oneindia tamil videos ஜெயலலிதா மெரினா கடற்கரை நினைவிடம் அஞ்சலி மொட்டை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Several AIADMK activists on Wednesday shaving their heads on the Marina beach where J Jayalalithaa was buried in a bid to show their affection to the former Tamil Nadu Chief Minister.
Story first published: Friday, December 9, 2016, 10:17 [IST]