காரைக்குடி 2 சிறுமிகள் பலாத்கார வழக்கு... நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட 3 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகக்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியே நேரடியாக தனக்கு நேர்ந்த அவலம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதில், தன்னையும் தன் அக்காவையும் இரண்டு பெண்கள் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், அரசு அதிகாரிகள், கட்சிப் பிரபலங்கள் பலர் தங்களைப் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அந்த வழக்கில் நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications